Monday, January 14, 2008

பிழைகள்!!!


என் கடந்த கால சுவட்டில்
திருப்பிய பக்கம் எல்லாம் எழுத்து பிழைகள்!
பிழைகளை இப்போது காணும் நேரம்
நானா செய்தேன் என்று தோணும்...
ஆனால் மறந்தே போயிற்று
பிழைகளின் மூலம் மனம் நிஜம் காணும் நிதர்சனம்!!!
தீ சுடும் என்று படித்தேன்; சொன்னார்கள்;
ஆனால் கையை சுட்டு புண்ணாக்கிய இந்த நொடி
ஏனோ அந்த பாரதியின் நினைவு!
தீக்குள் விரல் வைத்து தீண்டிய
சுகம் உணர்ந்தவன் அன்றோ அவன்!
எனக்குள் மட்டும் ஏனோ வலி...
பரவாயில்லை!
பரிணாம வளர்ச்சியில் இன்னும் நான்...
சீக்கிரம் எனக்கும் கிடைக்கும்
என் சிறகுகளும் ஒரு கூடும்!
அது வரை மனது எண்ணி கொண்டே தான் இருக்கிறது
இன்னும் எத்தனை பிழைகள் என்று!!!

2 comments:

butterfly Surya said...

சீக்கிரம் எனக்கும் கிடைக்கும்
என் சிறகுகளும் ஒரு கூடும்!/////////// வாழ்த்துக்கள்..

Chitra said...

பிழைகளில் தத்துவம் உதயமாகின்றன - ஒழுக்கங்கள் உருவாகின்றன - பாதைகள் கிடைக்கின்றன - தெளிவு வருகின்றன - கவிதைகள் பிறக்கின்றன.
அருமையான கவிதை.
நம்ம ப்லாக் பக்கமும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.