
எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...

இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..


சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் மத்தியில், மிருதுவான குளிரோடு ஒற்றை பனித்துளியாய் இறங்கி நெகிழவைக்கிறாய் தோழா..