Sunday, March 16, 2008

வருவாயோ நீ!!!

என் கண்ணின் நீர்த்துளிகள் படிக்கட்டுகள் ஆனால்
என் நினைவுகள் அதில் பாதை ஆனால்
நாம் சிரித்த சிரிப்பொலிகள் அங்கே விளக்குகள் ஆனால்
நாம் வாழ்ந்த வாழ்க்கை அந்த இடர்களை உடைத்தால்
நம்மை கடந்தவை எல்லாம் மறந்து போனால்
இந்நேரம் நான் உன்னை அடைந்திருப்பேன்
உன்னை என்னோடு மறுபடி அழைத்து வர!!!

உனக்கான என் கடைசி வார்த்தைகள்
என்னோடு
விடை சொல்ல எண்ணி
அதுகூட என்னில் சிக்கி...
வார்த்தைகளும், வாக்கியங்களும்
தட்டு தடுமாறி சொல்லாமல் நிற்க,
அதுவும் மறந்து போகுமோ
கால போக்கில்...

உனக்கு தெரியுமா?
என் இதயம் சொல்லாத வலியில் படும் அவஸ்தைகளும்!!!
ரகசியமாய் கண்ணீர் வழியும் தருணங்களும்!!!
இருட்டில் கிடக்கும் மௌனங்களும்!!!
சிரிக்கும் நேரம் உன்சிரிப்பு சத்தம் என் காதில் மட்டும்!!!
அழும் நேரம் உன் கண்ணின்
பளபளப்பு என் கண்ணுக்கு மட்டும்!!!
சுகிக்கும் நேரம் உன் மூச்சு காற்று என் மீது மட்டும்!!!
சொல்லிய சொல்லாத வார்த்தைகளின் வலி
என் நெஞ்சில் மட்டும்!!!
மனதை திறந்து சொல்ல முடியாத நிலையில் நான்
சொன்னாலும் கேட்க பிடிக்காத நிலையில் நீ

உன்னை இழப்பது கடினம் எனக்கு
அதை விடவும் கடினம் உன்னை மறப்பது....
என் வாழ்வின் பாதி நினைவுகளை
அழிக்கும் தைரியம் இல்லை எனக்கு...
ஆனாலும்
வாழ்வின் பாதை
வேறு பக்கங்களில் நம்மை அழைத்து போக!!!
தெரிந்தே பிரிகிறோம்...
நான் எதை இழந்தேன்?
நீ எதை இழந்தாய்?
என்ற கூட்டல் கணக்கின் விடை
உனக்கும் எனக்கும் மட்டும் தெரிய!
எல்லோரின் முன்னிலும் மௌனமாய்
விடை தெரிந்தும் பதில் இல்லாது...