Friday, March 7, 2008

என் தினமும்

இருட்டில் விட்டால் கூட என் வீட்டு
ஒவ்வொரு மூலையும் எனக்கு அத்துபடி....
ஆனால் பட்ட பகலில் கூட எனக்கு புரியாது
என்னை சுற்றிசுழலும் என் உலகம்...
பார்வை இருந்தும் கையால் துழவி கொண்டே
தட்டு தடுமாறி என் நடை!!!
இதுவரை என்ன செய்தேன்?
இனி என்ன செய்வேன்?
புரியாத கேள்விகளும்...
பதிலறியா மௌனங்களும்
என்னை கட்டி பிடித்து...
பார்க்கும் முகங்கள் எல்லாம்
என்றோ கண்ட முகங்களின் பிரதிபலிப்பு!
விருப்பமிலாத சிரிப்பும்
விரும்பியும் கிட்டாத தெளிவும்
முகமும் மூளையும் குழப்பி குழம்பி
எனை தோற்கடிக்கும்!
எதனுள்ளோ எனை தொலைத்து விட்டு
எதனுள்ளோ தேடி கொண்டே இருக்கிறேன்!
இந்த குருட்டு தேடலில் ஒரு சுகம்
போகும் வழியறியாது
போய் சேரும் இடமும் அறியாது
ஆனாலும்
நிற்காது ஓடுகிறது
என் தினங்கள்!