Saturday, November 7, 2009

உன்னுள் ....

மூடுபனி இருட்டு கண்களை காக்க...
மெல்லிய நிழல்கள் ஒன்றோடு
ஒன்று கலக்கும் இடத்தில்
நானும் நீயும்...
என்னை எடுத்து உன்னுள் கரைத்துவிட்டாய்!!!
சுற்றி சுற்றி நானில்லாமல் மறைந்தேன்
நீ எனக்காக சுவாசிக்க, புசிக்க, சுகிக்க,
நான் கவலை ஏதும் இல்லாது
உன்னுள் மிதக்கிறேன் இதோ...
உனக்காக எல்லாம் கொடுத்து
நானே இல்லாமல் ஆனேனே...
இந்த நான் இல்லாத வெளியில்
உன்னுள் இருந்தும் உன்னை தேடிக்கொண்டே நான்...
உன்னுள் கரைந்தும் நீ இல்லை என்னுடன்
இதயம் ஏங்க
உன் ஸ்பரிச துகள்கள்
என் மேல் படிய
காத்து நிற்கிறேன்...
விம்மி வரும் பாடல்
சோகம் ஏந்தி என்னுளிருந்து!
என் ஓசை உனை உருக்க
நீயும் கரைந்தாய்....
என் அன்பே...
இதோ நீயும் கரைந்து நானும் கரைந்து...
இருவரும் இல்லாது மறைந்தோம்..
எங்கே என தெரியாத அண்டவெளியில்
எல்லாவுமாக கலந்து....
எங்கும் இருந்தும் இங்கு இலாத நிதர்சனம்
இந்த இருட்டு ஏகாந்தத்தில்
உன் முத்த தழுவல் வேண்டி
காத்து நிற்கும்
என் பாடல் மட்டும்....