காத்திருப்பேன் !!!


இனிய நினைவு போர்வை இறுக்கி போற்றி,
பேச்சு தலையணை கட்டி பிடித்து,
தனிமை குளிர் விரட்டி
தூக்கம் தேடும் இக்கணத்தில்
ஏனோ ....
உன் சிரிக்கும் பார்வையும்
உன் மயிலிறகு மனதும்
கதகதப்பாய் என்னை சுற்றும்...
என் இமை இரண்டும்
உறக்க சுள்ளிகள் எரிக்க
உன் ஞாபக புகை
ஆற்று சுழலாய்
இந்த பேதை நெஞ்சின் அலைகளை
இன்னும் தத்தளிக்க வைத்து....
ஆனால்
நீ உறங்கு
என் அன்பே
என் புன்னகை சூடு பிடித்து...
உனக்கான என் வாசம்
சிறை அடைத்த பெட்டகம்
இதோ
என்னிடம்....
மீண்டும் உன்னை காண
நேர்கையில் உன்னிடம்
கேட்பேன் பண்டமாற்று!
உன் கனிவு பார்வையை
மொத்த விலைக்கோ
அல்ல
குத்தகைக்கோ... Read Full...

More sidhar pattu!!!


சிவவாக்கிய சித்தர்

* நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணு என்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...
சுட்ட சட்டி சட்டுவம்
கறிசுவையை அறியுமோ!!!

பத்ரகிரியார்
* ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலன்னை சுட்டெரித்து
தூங்காமல் தூங்கி
சுகம்பெருவது எக்காலம்!!! Read Full...

சித்தர் பாடல்கள் தொகுப்பு!!!


I am intrigued by these siddhar songs, which gives a different meaning at all point. I have started searching for them, recently. These ones are written by azhagani sithar. I really can't comment about these songs, coz I'm nowhere near the zone to really understand it. But I'm so honoured to even have a chance to read them...

* சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வெப்பிறப்பு வந்த போது வேதம் வந்ததவுமே
மாத்திரை எப்போது உள் அறிந்து கொள்ள வல்லரேல்
சாத்திரங்கள் ஏதுமில்ல சத்தி மூர்த்தி சித்தியே!!!

* வாழை பழம் தின்றால்
வாய் நோகுமென்று சொல்லி
தாழை பழம் தின்று சாவெனுக்கு வந்ததடி
தாழை பழத்தை விட்டு
சாகாமல் சாக வல்ல
வாழை பழம் தின்றால்
கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ!!!

* ஈசன் உடம்படியோ
ஏழிரண்டு வாசலடி
உண்பாய் என்ன சொல்லி
உழக்குழக்கு நெய் வார்த்து
முத்து போல் அன்னமிட்டு
முக்கனியும் சக்கரையும்
தித்திக்கும் தேனமிர்தம்
கண்ணம்மா
தின்று களைபாறேனோ!!!

* முத்து முகப்படியோ
முச்சந்தி வீதியிலே
பாதம் இதழ் பரப்பி
பஞ்சணையின் மேலிருத்தி
அதை அடுக்கி நிலையில்
ஆருமில்ல வேளையிலே
குத்துவிளக்கேற்றி
கண்ணம்மா
கோலமிட்டு பாரேனோ!!! Read Full...