
இனிய நினைவு போர்வை இறுக்கி போற்றி,
பேச்சு தலையணை கட்டி பிடித்து,
தனிமை குளிர் விரட்டி
தூக்கம் தேடும் இக்கணத்தில்
ஏனோ ....
உன் சிரிக்கும் பார்வையும்
உன் மயிலிறகு மனதும்
கதகதப்பாய் என்னை சுற்றும்...
என் இமை இரண்டும்
உறக்க சுள்ளிகள் எரிக்க
உன் ஞாபக புகை
ஆற்று சுழலாய்
இந்த பேதை நெஞ்சின் அலைகளை
இன்னும் தத்தளிக்க வைத்து....
ஆனால்
நீ உறங்கு
என் அன்பே
என் புன்னகை சூடு பிடித்து...
உனக்கான என் வாசம்
சிறை அடைத்த பெட்டகம்
இதோ
என்னிடம்....
மீண்டும் உன்னை காண
நேர்கையில் உன்னிடம்
கேட்பேன் பண்டமாற்று!
உன் கனிவு பார்வையை
மொத்த விலைக்கோ
அல்ல
குத்தகைக்கோ...
4 comments:
அருமை. உவமைகள் ரொம்ப நல்லாயிருக்கு.
வாழ்த்துகள்.
Awesome :)
எனது தோழனின் தோழிக்காக...
உங்கள் கவிதைகளைப் படித்தேன். மன்னிக்கவும் நீங்கள் கவிதை என நம்புபவதை நான் மறுப்பதற்கில்லை தோழி. உங்கள் மொழியின் வாயிலாக பிரிவாற்றாமையை, தனிமையைச் சொல்ல முயன்றிருக்கிறீர்கள். நல்லது. கவிதை முயற்சிகள் வாழ்க.கவிதையில் தனிமையை உணரும் வித்தை உங்களுக்கு கைவரப்பெறுமென நான் நம்புகிறேன். உங்களுக்கு என் அன்பு.- வசுமித்ர.
சிறுகுறிப்பு - மன்னிக்கவும்; துரதிருஷ்டவசமாக நானொரு கவிஞன். இதை நானே என் காதுக்குள் தனிமையில் சொல்லிக்கொள்வேன்.
I went through this. It is really a melting pot. Congratulations!!! Rifan
Post a Comment