
ஏனோ மனமும், மொழியும் பிழன்று நான்...
கேள்வி குறிகள் என் பசியாற்ற
உதட்டோர சிரிப்பு ஜீவன் குளிப்பாட்ட
கண் திருடும் கணங்கள் நம் உயிர் காக்க...
கனவு திரளில் உன் முகம், என் உறக்கம் விழுங்கி...
என்னுள் புகுந்து, என்னை பெயர்ந்து
இதோ பறக்கிறேன், மிதக்கிறேன், சிலிர்க்கிறேன்
அழுகிறேன், சிரிக்கிறேன்
ஏனோ சிரிக்கும் போதும் கண்ணில் நீர்...
எப்போதும் நீ இருப்போயோ என் அருகில்?
கஷ்டம் தான்...
இலக்குகள் தேடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கட்டாயம் பிரிவோம் நாளை...
அது உண்மை தான்...
ஆனால் வாழ்வில் ஒரு முறை
நான் உயிர் வாழ்ந்த புண்ணியம் உனக்கு தான்...
நாளைய நாட்கள் இறந்தாலும்
இந்த வினாடியின் உயிர் துடிப்பு
என்னுள் நீயாக...
என்றென்றும்!!!