Monday, January 14, 2008

வாசம்

எப்போதோ கண்டு எனக்கு
பிடித்து தான் இருந்தது ரொம்பவே!
உன் வாசம்...
கோவில் திருநீறும், ஈர மண்ணின் வாசமும் கலந்தது போல!!!
பக்கம் நீ செல்லும் போது சுவாசம் முழுக்க இழுத்து...
மெதுவாய் பின்னே அசைபோடும் நினைவுகள்!!!

இரவில் படுத்து,
இருட்டில் உன் வாசம் நினைக்க
கண் முன் வரும் உன் கண்கள்...
நாட்கள் தேய தேய...
அருகில் இருந்தும் வெகு தொலைவில் நீயும் நானும்...

தேயும் இந்த கணமும்
எதிர்பார்த்து காத்து கொண்டே இருக்கிறேன்!
தொலைந்த எனக்கு பிடித்த
உன் முகமும் வாசமும் உணர...

கண் எதிரே தான் நீ!!!
என்னால் தான் காண முடியவில்லை
உன் முகத்தையும், வாசத்தையும்
ஏனோ?

No comments: