Saturday, March 22, 2008

நானும் என் நிழலும்...

நிழலுக்கென்று சில விதிகள் உண்டு!!!
ஒரு அழகும் உண்டு...
கருப்போ சிகப்போ
அவலக்ஷனமோ அசாத்திய அழகோ
கோடீஸ்வரனோ இல்லை பிச்சை எடுப்பவனோ
நிழல்கள் எல்லாம் ஒரே போல!!!
இதோ தனியே இருந்து மறுத்து போய்
திரும்பும் நேரம்
எப்போதும் போல எனக்காகவே காத்து
நிற்கும் என் நிழல்!
சில நேரம் நான் நிழலாகி போக தோன்றும்
உனக்கு தெரியாது
உன்னை தொட்டு கொண்டே
இருக்க வேண்டி!!!
நீயும் நிழலாக மாறுவாயோ?
மாறினால் எத்தனை சந்தோஷம்...
நானும் நீயும் வார்த்தைகளே இல்லாது
இணைந்து இருப்போம்!!
வலி தரும் மொழியினை விடுத்து!!!

No comments: