Friday, February 8, 2013

அவை தின்னப்படுபவை தான்!!!



நான் முதல் இல்லை!
நான் கடைசியும் இல்லை!
நீயும் அதே!
நான் என்பதற்கும் நீ என்பதற்கும்
வலிக்கும், சிலிர்க்கும்..
அவை சிரிப்பவை, அழுபவை..

பெயர் என்ற ஒன்று வாடகைக்கு கொஞ்ச நாள் தங்கிசெல்லும்
நான் என்பது அதுவாக மாறும் வரை!!!
ஒன்றை ஒன்று விழுங்கும்..
மண் விழுங்கும் விதை
அதை விழுங்கும் மரம்
அதை விழுங்கும் பறவை
அதை விழுங்கும் மனிதன்
அதை விழுங்கும் மண்...

நான் என்பது நிற்காமல் ஓடுகிறது
மற்ற நான்களுடன்!!!
கலவியில் கூடுகிறது
சண்டையில் கொல்கிறது
இன்று போன நானை சுற்றி
நாளைக்கு போக இருக்கும் நான்கள் கட்டி அழுகிறது

இருக்கும் வரை நான் என்பது மட்டுமே மையப்புள்ளி
நான் என்பதை சுற்றியே சூரியனும் பூமியும்!!
நேரம் மட்டும் தான் வெவ்வேறாகிறது
ஆனால் எல்லாமே இங்கு தின்னப்படுபவை தான்
ஒன்றும் பாக்கியில்லை..

8 comments:

T.N.Elangovan said...

இது போன்ற abstract விஷயங்களை கவிதை என்ற கட்டுக்குள் கொண்டு வரும் திறமை கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்.

Kugan said...

நிதர்சனம் ஆழமாய் பதியப்பட்டுள்ளது அருமை படத்தை மாற்றினால் உத்தமம் திகிலாக உள்ளது

Kugan said...

நிதர்சனம் ஆழமாய் பதியப்பட்டுள்ளது அருமை படத்தை மாற்றினால் உத்தமம் திகிலாக உள்ளது

Vettipullai said...

திரு, இளங்கோவன் அவர்களுக்கு, நேரமெடுத்து என் கிறுக்கல்களை படிப்பதற்கு நன்றி..

Vettipullai said...

குகன் அவர்களுக்கு,

நான் எழுத தொடங்கும்முன் எப்போதும் தலைப்பை முடிவு செய்துவிட்டு, படங்களை தேட தொடங்குவேன். இது வரை எழுதியிருக்கும் அத்தனை பதிவுமே, படம் தேர்ந்தெடுத்த பின் எழுதப்பட்டது தான். இந்த படம் பார்த்த பின், இப்படி எழுத தோன்றியது. திகிலான நிதர்சனம்...

Anonymous said...

I cannot read this script as I dont know this language. But this picture is striking and disturbing.

sakthi2712 said...

Ulagam ,
Pumi ,
Naadu ,
Oor ,
Theru ,
Vidu ,
Nee ,
Naan ,
udal ,
Thalai ,
Kaal ,
Kai ,
Viral ,
Nagam ,
Anukkal ,
Anu.

Thendral தென்றல் said...

👌👌🙏🙏