Friday, March 7, 2008

என் தினமும்

இருட்டில் விட்டால் கூட என் வீட்டு
ஒவ்வொரு மூலையும் எனக்கு அத்துபடி....
ஆனால் பட்ட பகலில் கூட எனக்கு புரியாது
என்னை சுற்றிசுழலும் என் உலகம்...
பார்வை இருந்தும் கையால் துழவி கொண்டே
தட்டு தடுமாறி என் நடை!!!
இதுவரை என்ன செய்தேன்?
இனி என்ன செய்வேன்?
புரியாத கேள்விகளும்...
பதிலறியா மௌனங்களும்
என்னை கட்டி பிடித்து...
பார்க்கும் முகங்கள் எல்லாம்
என்றோ கண்ட முகங்களின் பிரதிபலிப்பு!
விருப்பமிலாத சிரிப்பும்
விரும்பியும் கிட்டாத தெளிவும்
முகமும் மூளையும் குழப்பி குழம்பி
எனை தோற்கடிக்கும்!
எதனுள்ளோ எனை தொலைத்து விட்டு
எதனுள்ளோ தேடி கொண்டே இருக்கிறேன்!
இந்த குருட்டு தேடலில் ஒரு சுகம்
போகும் வழியறியாது
போய் சேரும் இடமும் அறியாது
ஆனாலும்
நிற்காது ஓடுகிறது
என் தினங்கள்!

Saturday, March 1, 2008

போரில் நான்!!!

என் பூமகனே!
நான் செய்த புண்ணியம் நீ என்னுடையதானாய்!
ஆனால் நீ செய்த பாவமோ நான் உனக்கு தாயாய்!
எத்தனை எத்தனை தழும்புகள் உன் மனதில்
இந்த ஐந்து வயதுக்குள்!
மழலை சிரிப்பில் மூழ்கி விளையாடும் பருவத்தில்
உனக்கோ என் கண்ணீர் துடைக்கும் வேலை!
எனக்கு கிட்டிய அழகு குழந்தை பருவத்தை
உனக்கு கொடுக்க இயலாது நான்!
ஏனோ நீ ஒற்றை மரமாய் நிற்க நான் காரணமானேன்!
என் தவறுகளின் தண்டனை உனக்கு...

இதோ விடை கொடுக்கிறேன் மீண்டும்
ஒரு கோடி மன்னிப்புடன், என் இதயம் சிதைந்து
உன் முன்!
உயிரே பிசையும் வலி...
உன் கண்ணின் ஒவ்வொரு துளிக்கும்!
இன்னும் எத்தனை வேதனை நீ சகிக்க,
நான் காண வேண்டுமோ!
என் எதிரிக்கும் வேண்டாம் இந்த நரகம்
என் வாழ்க்கை பாதையை அழித்து அழித்து
எழுத சத்தியமாக ஆசை இல்லை எனக்கு!
உன் கண்ணீர் அடக்கி என் கண்ணை துடைக்கும்
உன் பட்டு விரல்கள்!
எத்தனை முதிர்ச்சி உன் கண்ணில்!!!

ஒரு அடி முன் வைக்க, பத்து அடி பின் வழுக்கி
இதோ திரும்ப தொடக்கத்தில் இருந்து என் ஓட்டம்...
நாளை கண் விழிக்கும்போது உன் முடி கலைத்து
முத்தமிட்டு எழுப்ப நான் இல்லை!
என்மேல் விழுந்து பிரண்டு, உன் யானையாய் மாற்றி
உன் பஞ்சு மூட்டையாய் மாறி,
கண்ணாமூச்சி ஆட நான் இல்லை!
மின்னல் வேகத்தில் குளிப்பாட்டி, உடை உடுத்தி,
ஒரு பக்கம் இட்லியும் சக்கரையும் ஊட்டி,
காலனி பூட்டி, பள்ளிக்கு அனுப்பி
புயலடித்து ஓய்ந்த அமைதியை உணர நான் இல்லை!
பள்ளி முடித்து நீ வரும் வழி பார்த்து
ஓடிவரும் உன்னை சேர்த்தணைத்து தூக்கி
உன் திராட்சை விழிகள் விரிய நீ சொல்லும்
கதை கேட்க நான் இல்லை!
இரவு உன்னை கட்டி பிடித்து
கதை சொல்லி உறங்க வைக்க நான் இல்லை!

இத்தனை கொடுமை நான் செய்தும்
விழியில் ததும்பும் நீரோடு, உன் ஈர முத்தத்தில் நனைத்து
என்னை பத்திரமாக இருக்க சொல்லும்
என் ஐந்து வயது தெய்வமே!
இனியாவது உனக்கு விடியல் கிடைக்க
இதோ என் தனிமை பயணம்!
என் வேண்டுதல் எல்லாம் எப்போதும்
உனக்காகவே!
எனக்காகவும் உண்டு ஒரே ஒரு வேண்டுதல்
இனி ஒரு ஜென்மம் இருந்தால்
நானே உன் தாயாய் வரவே அது...
அப்போதாவது ஒரு நல்ல அம்மாவாய் இருக்க!

Friday, February 29, 2008

விடை!!!

மனது கனத்து வலித்தது!
திரும்ப சந்திக்கும் விதி வருமோ!
இல்லை...
எப்போதும் போல நொடியில் மறையும் ஜன்னல் காட்சியாய்
மறைந்து போய் தான் விடுவாயோ!!!
நூலின் சிடுக்காய் மனசு முழுக்க
கேள்விகளும், துணை கேள்விகளும்...
இனி காணவே முடியாது போனால்
தாங்க தைரியமுண்டா என் இதயத்துக்கு?
புதிதா என்ன இந்த இத்து போன என் வாழ்வில்
ரயில் சினேகிதங்கள்!!!
வாழ்க்கை முழுக்க வந்து வந்து
மறையும் மின்மினியாய் முகங்கள்!!!
சிலருக்கு தான் எத்தனை பாக்கியம்!
ஒரே இடத்தில் பிறந்து, அதே இடத்தில் வாழ்ந்தும், முதிர்ந்தும்
அதே இடத்தில் ஜீவன் உதிர்ந்தும் போய்...
ஏனோ எனக்கு ஒரு நாடோடியின் வாழ்வு!
சிறிய மூட்டையாய் முதுகில் நியாபகங்கள் சுமந்து...
செல்லும் வழியெல்லாம் கால் தடம்கூட விடாத காற்றாய்
நான்...
வறண்ட என் பயண பாதையில்
நான் இளைப்பாற எனக்கு கிட்டிய ஒரு அகன்ற மரம் நீ!
மனதும் உடலும் ஓய்ந்து நின்ற நேரம்
மீண்டும் உயிர்பித்தது உன்னால்தான்!
நான் நீராய் போனால், உன் வேறை சேரலாம்
இல்லை
மண்ணாகி போனால், உன்னோடு இறுகி போகலாம்
ஏனோ
அலையும் காற்றாய் போனேனே!!!
எஞ்சியது நினைவில் அந்த சில நிமிட தழுவல் மட்டும்
திசை மாறும் இடமெல்லாம் நான் போக
மீண்டும் உன்னை காண நேர்ந்தால் சந்தோஷம் தான்
ஆனால்
என் தொடல் சில நிமிடம் தான்!
மீண்டும் விடை கொடுப்பேன் உனக்கு
என் முத்தத்தின் ஈரத்தோடு,
கண்ணீரின் சுவை கலந்து!

Back to square one... On the Move!!!







This is girl on the move... again starting from square one. Well, This time, My fate has brought me to Seychelles... Once again, After going through the same painful process of biding my son bye and almost an hour of crying, hugging, lots and lots of excruciating ache inside and loads of eyes staring at me and my son crying at the airport side walk and few of the passengers even stopping to look at us and watching my mom, brother and sis in law and my niece standing and looking at us helplessly ... I finally said bye and boarded a flight to Mumbai, which departed Chennai at almost half past nine at nine.
Well, the fun doesn't end there folks. I reached Mumbai and then was supposed to collect my luggage's and head to international airport. And My luggage went missing. I was supposed to check in for Kenya airlines at 12 midnight. And I was stranded without my luggage. By the time they traced the baggage, which was taken by a fellow passenger who had reached home and was almost about to hit the bed, It was 1'0 clock. Finally had to beg the person to bring the luggage and I was running like a marathon star and after 2 hours of nail biting tension, I finally was in the queue to board the flight to Nairobi. The flight took off at half past 3 and reached Nairobi at 7 in the morning ( Almost 5 hour journey).
Nairobi airport was no different from any other. Loads of tourists, crowded. Finally took a flight from there to Seychelles at 9 in the morning and We were flying over Indian Ocean and finally reached this place. So I have started to work here. Nice job. Learning Creole, which is the language of Seychellois.
As I always say, Same characters and same story line with different actors and different dialect. So that is it in nut shell....lol
I am going to write a book like Adventures of Sinbad which stars me Of course! with all my silly hideous experiences... Once again dreaming of the day, when I can be with my son !!!

Friday, February 8, 2008

காதல் மறித்து...

எப்போது புரியும் உனக்கு, என் அன்பே
உனக்கான என் காதல் மறித்து
வருடம் பல ஆன உண்மை!
வார்த்தைகளில் பஞ்சம் இப்போது அன்பு
நம் தொடக்கம் எப்படியோ?
பட்டசாய் வெடித்து, வெளிச்சவண்ணம் பாய்ச்சி
இப்போது மிச்சம் குப்பையாய்...

காதலின் சாயல் கூட காணாமல் போய் நாட்கள் பல
கண்ணில்...
உயிர்ப்புடன் தகிப்பதோ இன்று
ஊமையான கூக்குரலும்...
மூச்சடைக்கும் வாழ்க்கையும்...
சொல்லாத வெறுப்பும்...
உயிர் கொல்லும் தனிமையும்...
வண்ணம் பறித்த பார்வைகளும்...
கனவுகள் காணாமல் போன எதிர் காலமும்...
எப்படி இறந்து போனது என் காதல்...
சட்டென்று சாகவில்லை தான்
தினம் தினம்...

கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்வையில் சிறிது மறித்து...
ஒரு சொல்லில் கொஞ்சம்...
சந்தேகத்தில் இன்னும் வேகமாய்...
இறந்த என் காதலை எண்ணி
கண்ணீர் விட தோன்றும்...
ஆனால்
வேதனையை விட வெறுப்பு கூடுதல்
காரணம்...
என் காதலை நீ கொன்ற விதமோ...

யாருக்கு காயமும், வேதனையும், பாதிப்பும் கூடுதல்
இந்த உயிரற்ற விளையாட்டில்?
உனக்கா... எனக்கா...
மறித்தது என் காதல் என்ற உண்மை புதைத்து வைக்கலாம்தான்...
ஆனால்
அந்த புழுக்கம் போதும் நான் இறக்க
இதோ...
என் வாழ்வின் கசப்பு
நான் தொடும் எல்லாவற்றிலும் சாயமாய்...
இத்தனை வேதனை சகிக்க
எத்தனை காதல் இருந்திருக்க வேண்டும்
உன்மேல் என்னுள்...
எஞ்சி இருப்பது வறண்ட நான் மட்டும்
அடுத்து செய்வதறியாது
உன் நினைவுகள் புதைத்த கல்லறையில்
நானே காத்து!

Monday, January 21, 2008

வர்க்கம்

ஈட்டி தங்கி வேட்டையாடி
வீடு காத்து நாடும் காத்த வீர மறவர்
இருந்தனராம் முன்பு...
வீரம் மீசைக்கு பின் மறைந்தும், மறந்தும், மறித்தும்
ஆண்மையும் வாயின் நெருப்பில் பொசுங்கி போக
பொறுப்பும் பெண்ணின் கையில் கொடுத்து விட்டுசூம்பி போன வர்க்கம் ஏனோ
ஆண் என்ற வார்த்தையில் மட்டும் கம்பீரமாய்...

காலை தொடங்கி இரவு வரை
குடும்பம் மட்டும் நினைத்து
பேணி வளர்த்து, பொத்தி பொத்தி காத்து
குடும்ப விருட்சத்தின் ஆணி வேறாய்
பெண்கள்!
இன்று படி தாண்டியும் பத்தினிகள் ஆக
படிப்பும், வேலையும், குடும்பமும் கயிர் போல் திரிந்து நிற்க
நிலை தப்பி விழாமல்
தினமும் கம்பியில் பயணம்...

வீட்டில் அடுப்பெரிக்க பிறந்த பிள்ளைக்கு
பாலூட்ட இயலா அவலம்
ஏனோ
எரியும் நெஞ்சு அணையாது
அந்த மார்பின் பால் கசிவில்...
சமுதாயத்தின் அடையாளத்திற்கு
தாலி மிக முக்கியம்தான்
சுமக்க போவது என்னவோ பெண்தான்
கல்யாண சந்தை பேரம் பேசி
மார் தட்டி விலை போவதோ ஆண்...
ஏனோ சபையில்
தலை நிமிர்ந்து ஆணும்...
தலை குனிந்து பெண்ணும்...

Friday, January 18, 2008

வேசி...

உதட்டில் சாயம்...
கண்ணில் மை...
வாயில் வெற்றிலை...
அலட்சிய பார்வை...
மதமதத்த தேகம்...
இடுப்பில் மடிப்பு...
உதட்டோரம் ஒரு சுழித்த சிரிப்பு...
மார்பு சேலை சரி செய்ய கூட தோன்றாத பெண்மை...
பார்ப்போர் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம்...
பெண்களிடம் பொதுவாய் உள்ள எல்லை கோடுகள்
காணாமல் எங்கோ போய்விட்ட நிலை...
கிறக்கமாய் அருகில் ஆண்களிடம் கூட காட்டமாய் ஒரு பேரம்...
விலை படியுமோ படியதோ என்ற கேள்வி குறி
பெண்கள் ஒதுங்கி நின்று கண்ணால் அவளை சுட்டெரிக்க...
யாருக்கு தெரியும் அவள் கதை
என்னவென்று
நோயான தாய் தந்தையோ இல்லை
குடிகார கணவனோ இல்லை
பசியோடு பிள்ளைகளோ...
பண்டமாற்று முறையில் கை மாறும்
இவள் பெண்மை
மறுத்தும் மறித்தும் தான் போய் இருக்குமோ?
ஆனால்
கண்ணோரம் தொக்கி தான் நின்றது
ஒரு சோகம்
இன்னொரு இருட்டை தேடி...

Moments of Madness!!!


I had a weird experience last night, when I was in the casualty. At around 2, there was a lot of commotion in the reception at my hospital. There is a Police station in front of my hospital. The Hall was full of Police officials and lots and lots of noise. In the midst of this uniform crowd, there was a guy with an unconscious girl in his hand.

My initial thought was that the Police have confiscated this couple who were trying to commit suicide and later thought that may be its a couple quarrel. Anyways, I got down to business and started examining the girl. After I was sure that she was Ok, I started talking to her, I understood that she is married for the past 14 years to a drunkard and has 3 kids and then fell in love with this guy who was working with her and just eloped with him. She was in so much of turmoil. She said that all her life she was not loved at all and she adores her kids but when she found a person who cared for her and loved here the way she wanted, She just couldn’t think of anything sane.

Now, this is a tricky issue. I am no one to judge her action, because it is her life and she has all the right to do whatever she wants to do with her. But Trust me, In every relationship, whether it is a husband or a wife, there are moments when we feel like running away somewhere with or without someone. Most of the relationships are so pathetic. We call a marriage a huge success by the numeric value attached to it. If they are married for so many years together, it is success. I am pretty sure, in most of the long term marriages; there are less than 10 sentences between the couples in a day.

But being bound to each other by mere chains like society, creed, clan, family name, status instead of love or faith or trust is not the meaning of a successful relationship. With each passing moments, the suffocation and the wrath just keeps on mounting and all the time, we are swearing in our heart of hearts at the person whom we once liked or loved. The relationship is so dead and no matter where you turn, its like you stand in a maze and keep trying to find a way out in the dark.

Honestly, Is so much hurt, pain and tears necessary? I don’t know but it’s surely not worth our one and only life.

Am I safe ? No easy Answer...

I read a very impressive article and here are the tidbits… I guess it might sound as if it’s overrated… But the problem still prevails. It’s about Violence against women. This means violence which can range from Unwanted Stares and comments to Touching, Pushing, Groping to Rape and Murder.

The reality is that crimes against women occur and have been occurring. It has not stopped just because there is more money, more education, more urbanization, more globalization or more liberalization. The difference is that more of them are being noticed and reported.

Safety for women is an unfulfilled wish most of the time, depending on how you define it. If by “Safe” you mean that a women should be able to walk on street, travel or a train or bus, go shopping, go to cinema, go to restaurant, go to pub, go to college or school, go to an office, drive a car or scooter, work in a factory, work in a field, play any sport – in other words do what any human being would wish to do – without being pushed, hit, abused, attacked. Then all Indian women are unsafe. Millions of women are not safe even within their homes.

When such assaults occur, it is easy to shrug our shoulder to say our men will never do that kind of stuff. It’s the guys from that place or who speak this language etc, etc. How does the origin of a man, his religion, the color of skin, level of education, where he works and whether he words, his caste or his nationality matter when it comes to the question of sexual assaults? Are such crimes committed only by the poor, the lower caste, the unemployed or the uneducated? Unfortunately the answer is no. It happens in all level. The degree might vary but the basic attitude is the same.

The real solution for this sick ongoing problem is that we must grapple with when such incidents occur has a name, it is “Patriarchy”. It includes that inability of men to accept that women have rights, that they are human beings, that they should be left alone, that they have the right to occupy space in a public arena.

Time and again, Deep seated Patriarchal attitudes are laid bare when an assault on women is reported. The time worn arguments about the way women should dress in public are doled out. Women will be safe if they stay away from certain places, we are told. Women must not go out in the middle of crowds of men, we are advised. Men will be men, so women must be careful, we are warned.

The basic attitude that still prevails irrespective of caste, class or creed, can be summed as follows. Men know, Women don’t; Men must teach, Women must learn; Men can behave as they like, Women must conform. Need to say more? The exceptions do not make the rule, as we have seen time and again.

How do we change these patriarchal values? There are no easy answers. Women all over the world have been struggling to do just this.

Monday, January 14, 2008

நீ!!!

என்னுள் நீ வந்த பின்...
ஏனோ மனமும், மொழியும் பிழன்று நான்...
கேள்வி குறிகள் என் பசியாற்ற
உதட்டோர சிரிப்பு ஜீவன் குளிப்பாட்ட
கண் திருடும் கணங்கள் நம் உயிர் காக்க...
கனவு திரளில் உன் முகம், என் உறக்கம் விழுங்கி...

என்னுள் புகுந்து, என்னை பெயர்ந்து
இதோ பறக்கிறேன், மிதக்கிறேன், சிலிர்க்கிறேன்
அழுகிறேன், சிரிக்கிறேன்
ஏனோ சிரிக்கும் போதும் கண்ணில் நீர்...
எப்போதும் நீ இருப்போயோ என் அருகில்?
கஷ்டம் தான்...

இலக்குகள் தேடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கட்டாயம் பிரிவோம் நாளை...
அது உண்மை தான்...
ஆனால் வாழ்வில் ஒரு முறை
நான் உயிர் வாழ்ந்த புண்ணியம் உனக்கு தான்...
நாளைய நாட்கள் இறந்தாலும்
இந்த வினாடியின் உயிர் துடிப்பு
என்னுள் நீயாக...
என்றென்றும்!!!