Sunday, November 22, 2015

Rapacious proclivity !!!


In the oppugnant realms of life,
Stares two existence at each other!!!
" The You with I " keeps looking at
" The You with her " in utter bewilderment!!!

The torrential monotony of life!!!
Passes with you both surfing together on its ripples
Where as I can only watch you both together
From my lonely shore!!

Not a pinch of love!!
Not an ounce of passion!!
Not a thimble of tenderness!!
Not an inch of promise!!
Not a nickel of care!!
Not a speck of interest!!
I do not have any love left for anyone else
Other than you!!
I'm bored with everything else
Other than you!!
He says as he stacks him million reasons
One on top of the other!!
He purrs, He scrutinises, He prowls
As he sharpens the claws of
His leonine masculinity!!

The lonely "I" is pent upon
Clinging to your words
Stroking your needs
Succumbing into an abyss!!
Immaterial of what "l" do
The reality booms when
You pout and say Cannot abnegate her
Whilst you keep her in your arms and
Your reasons chirp in your palms!!!

I bestow a vertebrae at a time
For a kind smile
For a soulful look
For a warm touch!!
Not a fraction of doubt
Your heart is good and kind!!
But within your greedy wants
Lays my love decaying into fetid nothing !!!

Once again,
I unfurl, I shine, I stretch my wings!!
A turquoise sky for just me and my heart!!
A misty silver cloud for just me and my soul!!
A deep green jungle for just me and my journey!!
I wish for a colossal tree
With the deepest darkest red flowers!!
I wish to weave my tiny gold nest!!!
Where I can lay without fear
Where I can smile without insecurity
And dream of a path
Which has no talons, claws or teeth!!!



Saturday, December 14, 2013

இரைச்சல்!!


லட்சம் லட்சம் குரல்கள் பிறந்து வளரும்
தோட்டம் சூழ்ந்த வீடு அது!
விதி தூவலால் விதைந்து முளைக்கும் குரல்கள் அவை!
விழிநீர் கசிவில் செழிக்கும் கிசுகிசுப்பு கரும்பொதிகள்!
சிறு மூட்டையாய் பிறந்த குரல்களுக்கு
மெல்ல உடல் சிலிர்த்து கை கால் முளைக்கிறது!

நீ தோற்கிறாய்! நிச்சயம் தோற்பாய் பெண்ணே - ஒரு குரல் !
இன்னொரு குரல் வளைய வந்தபடி சொல்கிறது
உன் இருட்டை நான் நன்கு அறிவேன் என்று மெல்ல இளித்தப்படி!
குழையும் இன்னொரு குரல்  ரத்த பசியோடு
நீ இது தான்! இவ்வளவு தான்! ஒன்றுமே இல்லை என்கிறது!
நீ மெல்ல கரைந்து காணாமல் போவாய் எங்களுள்
என்கிறது பழிக்கும் ஓங்காரமான குரல்கள்!

அவளும் தினம் அடைக்கிறாள் அவள் வீட்டின்
கதவு, ஜன்னலோடு சேர்ந்து ஒவ்வொரு விரிசலையும்!
வளரும் குரல்களின் இரைச்சலோடு தினம் யுத்தம்
அவள் உள்ளே!

நான் அவளில்லை! நான் அது இல்லை! நான் வேறு!
என்று சொல்லும் அவளுடைய ஓசை அலறி அலறி
அடங்க யத்தனிக்கும்!
அவள் வீட்டின் சுவர்களை சுரண்டியும் பிட்டும் பிராண்டியும்
உணவாக்கி குரல்கள் வீட்டை சூழ்ந்து நிற்கும்!
நேரம் நீள, சுவர்கள் மடிந்து குரல்களுக்குள்  நிரம்ப
அவளும் கரைந்து தான் போகிறாள் அவற்றோடு
மீண்டும் ஒரு தோட்டமும் வீடும் பிறக்கும் வரை!!!

Saturday, July 6, 2013

முதன் முதல்!!!


எல்லா கணங்களும் நினைவில் எப்போதும்
நிலைத்து போக ஓடுகிறது
ஓட்ட பந்தயம் ஒன்றில் நேரத்திற்கு எதிராக!

கருமுட்டையை  தொட்டு விட
முட்டி மோதி விரையும் லட்சக்கணக்கான விந்தணு போல!
நீர்த்துளிகளை கலந்து கட்டி
உடைந்து தெறிக்கும் ராட்சத நீர்வீழ்ச்சி போல!

விகாரமானவை எல்லாம் அழகாகிறது
உடைந்து அழுகி போகும் சாதாரணங்களில்!!

இறந்து போனவர் இன்றி கழிக்கும்
முதல் பிறந்த நாள் பெரிதா
திருமண நாள் பெரிதா
இறந்த நாள் பெரிதா
என்று தராசு முள் எங்கோ 
ஒருத்தியின் மனதில் கணித்துக்கொண்டிருக்கிறது!
ஆனாலும் உறைந்து போகும் கணங்கள்!!!

ஒவ்வொருவரின் முத்தங்களும்
எப்படி தீர்மானித்து அடுக்கப்படுகிறது
மூளைக்குள்!!!
கொடுக்கும் முகமா, 
அது கிளரும் நெருப்பா,
மறைந்து போகும் உறவுகளா?
ஆனாலும் உறைந்து போகும் கணங்கள்!!!

இருக்கும் போது போய்விடாதா என்றும்
போன பின் இருக்கக்கூடாதா என்றும்
புரட்டி போட்டு கொண்டே போகும் 
வன்மமும் காதலும்
உண்மையும் பொய்யும்
புணர்ந்து 
உறைந்து போகும் கணங்கள்!!!

வார்த்தைகளும் இடமுண்டு 
இந்த நினைவு கல்லறையில்..
அடக்கம் செய்வதால் தானே உறைந்து போகிறது!!!
அழுக விட்டால் கறைந்து காணாமல் தானே போகும்!!!

இறந்து போகும் அப்பாக்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் அம்மாக்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் கணவன்களின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் மனைவிகளின் வார்த்தைகளும்!!!
இறந்து போகும் குழந்தைகளின் வார்த்தைகளும்!! 
இப்படி அடுக்கி கொண்டே போகும் இவைகளும்
முண்டிக்கொண்டே இருக்கிறது
நினைவுகளில் சிக்கி கொள்ள!!!

ஒவ்வொரு நினைவிற்கும் வளர்ந்து சுருங்கும்
மனதும் மூளையும் 
மாற்றிக்கொண்டே 
இருக்கிறது
முகத்தை!
முதன்முதல் என்பதன் அர்த்தங்களை போலவே!!!




Friday, June 21, 2013

நீயும் நானும்!!!


எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிந்து போகும்
ஏதோ ஒரு பாதை ஓரத்தில்
யாரோ ஒரு நீயும் யாரோ ஒரு நானும்
எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்!

கேள்விகளையும் பதில்களையும்
லேசான சிரிப்புடனும் கோபத்துடனும்
பிண்ணியபடியே செல்லும் அவர்களுக்கு
தெரியாது நாளை எப்படி என்று!

கேள்விகள் குமிழிகளாய் மாறி பறந்து அங்கங்கே
நடந்து கொண்டிருக்கும் நீ / நான் மீது மோதி வெடிக்கிறது!

நீ : உன் உடலெல்லாம் மூட பூ வேண்டுமா? பட்டாம்பூச்சி வேண்டுமா?
நான்: என் மேலமர்ந்ததும் மெத்தென்று பூவாக மாறிப்போகும் பட்டாம்பூச்சியும், என் மேல் விளைந்த பூக்கள் இறக்கை முளைத்து
பறந்து போகவும் வேண்டும்

நீ: வானவில்லில் ஏறி சறுக்குமரம் ஆடுவாயா? ஊஞ்சல் கட்டுவாயா?
நான்: வானவில்லை விண்டு வாயில் போட்டு விழுங்கி உடம்பெல்லாம் மாறும் நிறத்தை பார்ப்பேன்!

நான்: நீ வானம் வரை பெரிதாக வளர்வாயா? இல்லை குறுகி அணு அளவு ஆவாயா?
நீ: அணுவளவு குறுகிப்போய் உன்னோடே எப்போதும் இருக்கலாம், இல்லையா!

நீ: பூவில் எந்த பூ பிடிக்கும் உனக்கு?
நான்: சிகப்பு வரிகள் ஓடியபடி அரிசி போல் கூராக இருக்கும் ஜாதிமல்லி!!

நாட்கள் ஓட, பல நீயும் நானும் காணாமலே போனாலும்
இப்படியாக தொடங்கி முடியும்
கேள்விகளும் பதில்களும் மட்டும்
இப்போதெல்லாம் நிறைய பறந்து
தெறித்து உடைந்துகொண்டே இருக்கிறது!! 

Tuesday, April 9, 2013

வார்த்தை கூடுகள்!!!


அழகான மெல்லிய கூடுகளால்
சுமந்தபடியே திரியும் மனிதர்கள்!
சில கூட்டுக்குள் பழுத்திருக்கும் பழமும்
சிலவற்றுக்குள் பூரானும் ஒளிந்திருக்கிறது!

உருட்டிவிட்டால் விழும் தாயம் மட்டுமே
நிர்ணயிக்கிறது வரப்போவது
பழமா பூரானா என்று!
எத்தனை உருட்டினும் பழம் கிடைப்பதே இல்லை!

அசைந்து வளரும் அவைகளை
உற்று நோக்கினால் கூடுகளை இழைத்து
கொண்டிருக்கிறது வார்த்தைகளும்
வார்த்தை சார்ந்த நினைவுகளும்!

ஆட்களுக்கு ஏற்றார் போல நிறம் மாறும் கூடுகள்
நேரத்திற்கு தகுந்தாற் போல் உருவம் மாறும் கூடுகள்
சிறிதாகி பெரிதாகி இருந்தும் மறைந்தும் ஆடும்
இவற்றின் நடுவே நானும்!

உன்னுடைய வார்த்தைகளை கொண்டு என்
கூட்டிற்கு வர்ணம் தீட்டினாய்!
அங்கங்கே எப்போதும் உன்னோடு! நீ மட்டுமே வேண்டும்
என்ற வாக்குதத்தங்களையும் என் கூட்டிற்குள்
கூசாமல் மாட்டி சென்றாய்!

உன் வார்த்தைகளால் இழைத்த பகுதி
அழுகி நாறும்!
உன் வார்த்தைகளை ஏற்றதால் என் கூடும்
கருகி சாகும்!

பேராசையின் வார்த்தைகளுக்கும்
விஷம் தோய்ந்திருக்கக் கூடும்!
ஒவ்வொரு முறை வார்த்தைகள் கருகும் போது
புதிய வீரியத்தோடு வார்த்தைகளை இழைக்கிறாய்!

இடிந்து மடிந்து விழும் உன் வார்த்தை கூட்டோடு
என்னுடைய சிறகும் மங்கி போகிறது!
இறந்து இறந்து பிறக்க உனக்கான வார்த்தைகள்
உன்முன் மண்டியிட்டே காத்து கிடக்கிறது!

உன்னோடு குழைந்து வளைய இனி என் கூட்டிற்கும்
என் சிறகிற்கும் தெம்பு இல்லை!
கூடுகளில் ஒளிந்திருந்து வாழ்வதை
மட்டுமே பழகிய எனக்கு
இனி மழைநீர் துளிகள் இடம் தரும்!

Sunday, March 31, 2013

நானும், என் நேற்றும்!!!


வேர்களால் புதைந்து போன என் வீட்டின் உள்ளே
மிதக்கும் கருப்பு நதியொன்றில்
வந்து விழுந்தது நேற்று
சின்னஞ்சிறு தீப்பொறி எங்கிருந்தோ!

சிகப்பும் தங்கமுமான நட்சத்திரம் ஒன்று
உடைத்து வந்தது பொறிக்குள்ளிருந்து!!!
மெல்லிய வெள்ளி சிறகுகள் கொண்ட  நட்சத்திரம் தானே
என எனக்கான சிறிய வீட்டுக்குள்ளே
அதற்கும் ஒர் இடம் கொடுத்தாக நினைவு!

அதுவும் வளர்ந்தது நுட்பமாய்
என் இருட்டெல்லாம் மெல்ல விண்டு விழிங்கியபடி!!
பார்க்கும் போது சிரிப்பதாகவும்
பார்க்காத போதும் என்னையே பார்ப்பதாகவும்
சொல்லிக்கொண்டே நடனம் ஆடியது!!!

என் இருட்டு வீட்டுக்குள் இருந்த எறும்பும், புழுவும்
தீர்ந்து போய் பசிப்பதாக சொல்ல
என் படுக்கையும் சுவரும் ருசிக்கிறது என
சொல்லியபடியே உண்டு முடித்தது வின்மீன்!!!

சுற்றி பார்க்கையில் சலசலக்கும் என் கருப்பு நதியை காணவில்லை!
என் வேர் சுவரும், கூரையும், நாற்காலியும் காணவில்லை!
என் உடைகளும், சீப்பும், கண்ணாடியும் காணவில்லை!
என் வேரில் ஒளிந்திருந்த மின்மினிப்பூச்சிகளை காணவில்லை!

இனி உண்ண ஒன்றும் இல்லை என்று உதடு பிதுக்க
என் கையும் காலும் பிய்த்து கொடுக்க
கண்ணை மட்டும் விட்டு எல்லாம் விழுங்கி
அழகாய் வாய் துடைக்கிறது நட்சத்திரம்!

கைக்குள் சிறிதாய் அடங்கியிருந்த நிலை மாறி
என் பூமியும் வானமும் சுவரும் ஆகி போன
நட்சத்திரம் வந்ததில் இருந்து
என் இருட்டு வீடும் என்னையும் காணவில்லை!

இனி உண்ண இங்கொன்றும் மிச்சமில்லை என்று
எஞ்சியிருந்த என் கண் பார்த்து
புருவம் உயர்த்தி சொல்லிவிட்டு
வெடித்து சிதறியதில் ஆயிரம் தீப்பொறியாய் மாறி
வேறு நதிகளில் விழ காற்றில் பறந்து போவதை பார்த்தப்படி
என் கண் புதைகிறது இருட்டுக்குள்!

Wednesday, March 20, 2013

SO YOU THINK WE ARE JUST MAKING A SCENE??



            Its is almost 2 weeks into running since students all over Tamilnadu started smaller sparks here and there & finally it’s catching up. It probably must have happened before March 2009 but better now than never.  What are these students fighting for? What is the actual reason for this hunger strike? What is the general public’s idea about what happened to Tamil civilians across in Srilanka?
            Whose responsibility was it to make sure that news of such great importance from a humane point of view, reach the public? Don’t we all know already that media and the politicians have had a joint iron clad on the whole issue and made sure it was swept under the rug!!! Though there had been plenty of evidence on the internet about the war crimes including documentaries made by Channel 4 BBC, still most of the politicians and media never bothered to take this to the nation. Why is that???
            We would just like to reflect upon what was happening in Srilanka when the war was at its peak in March 2009. Indian government have been training Srilankan army to fight against LTTE, which is continued until now. Most of the military training happened in Tamilnadu and most of the military weapons used to kill both the so called militants as well as the hundreds and thousands of civilians reached Srilanka through Tamilnadu ports.
            It was that time that Indian navy surrounded the Srilankan sea routes to help Srilankan navy eradicate the LTTE’s naval force. It also denied entry for the civilians who were trying to seek sanctuary into India. Srilankan army kept encroaching the lands were Tamil’s inhabited making mass murders, rapes and looting their way through. Thousands of Tamils who had lost their lands, houses, belongings, family members  were asked to walk through certain paths which were declared safe for civilians and these paths were targeted and K fir planes cluster shelled killing and injuring these innocent lives.
            The only support these Tamil civilians had was from the so called militants who were slowly demolished. Even the militants who surrendered with white flag were killed in the most inhumane and undignified manner. There are certain videos on the internet which shows how a human can be disgraced and killed beyond words can describe. We are not talking about just men here. We are talking about women, elderly and children even new born babies.
            The stories that have been told will make anyone with even an ounce of heart stand up and help these people. People were walking for months on end from their now unsafe homes to seek a safe place for whoever still survived in their families. We are talking about more than 4 lakh civilians made to converge and concentrate in a less than 35 square kilometres space. They were pushed toward the sea area by the encroaching Srilankan army on one side and weren’t allowed to leave by sea either. They simply had no help.
            We are talking about food to eat, clean water to drink, medicines for the injured, toilet facilities for all these remaining 4 lakh people who were made to converge in this space. There are stories which will bring chill in one’s spine. Families were made to leave behind their loved ones who were hurt and couldn’t walk.
            Here is one such story which is not even the nano tip of the iceberg. A young mother who had lost her husband and other family members was walking with her two kids. The 10 year old son gets his leg shattered during a shell attack. She watches him scream in pain and agony and the other 4 year old daughter crying out scared. The mother physically couldn’t pick her son and walk no matter how much she tries. She could hear the army approaching. She leaves behind this precious son and runs with her daughter. The mother is hit by another shell attack and gets into a bush to hide her as well as the 4 year old. The army is killing its way through with no mercy. The army men hear the 4 year old child cry and rape her repeatedly in front of the child. The Bleeding mother in agony stopped making any sound a while ago, but still the perverts were not done with her. NO one knew when she died. The remaining 4 year old baby girl is hit by the stock (wooden handle of the gun) until she died.
            There are the millions and millions of stories heard from the surviving from what happened in 2009. These are the voices against all the war crimes and atrocities that happened in a region, which did a silent ethnic cleansing. Was there anyone to even listen to these stories, leave alone investigate it any further? A big fat no!!!!   An international political community simply turned their face the other way from every piece of evidence, put forward for justice. And there is a reason behind this.
            There was a military operation which was called ‘’ BEACON OPERATION ‘’. A simple gist about it;
            As many know the literal meaning of beacon stands for showing way to those who are lost. In Nov 2005, Srilanka, India and 20 other countries joined hands to come up with this operation in Norway’s capital Oslo. These were the agenda’s
·         LTTE should be fully eradicated
·         It should start functioning by May 2006
·         It should finish its operation by May 2009
·         Rest of the Militants who were left out will be swiped out before May 2011

            Like it was planned the first shelling started in Samboor on the 25th of May 2006. This was the
Beginning of 4th Tamil ealam war that took place in Srilanka. None of the international countries said anything about this.

            This was supposed to be the Time of peace treaty. Norway was supposed to be helping both parties settle their indifferences without any damage to lives. This violation of the treaty on the part of Srilanka was never condemned by any of the international countries who were part of this peace treaty.
            It is crystal clear that though the Operation beacon was supposed to eradicate LTTE, its hidden agenda was to wipe out the Tamils from Srilanka. One of the main stem of their operation was to attack using long distance canons and shell attacks by plane. They didn’t care whom they killed as far as they killed many. This attained them to achieve the following... To kill as many Tamil as possible, To bring out the rest of the LTTE who would want to protect the people, To crumble the situation in such a way that nobody will be able to lift even a finger against the government and if possible will have a few Tamils who would turn into their side to become their spy.
            When such mass ethnic cleansing happened as per the Operation Beacon, they did fear that they will get resistance from world Tamil federations. They identified 12 countries to be most powerful in their resistance. This operation had the liberty of arresting any politician or civilian who might rise against this operation, in the name of assisting militants and terrorism.
            Please do remember, The Ex Chief Minister, Mr. Karunanidhi who has suddenly made the news by quitting the Congress today and suddenly find himself passionate for the millions of tamil who died was the acting chief minister when these atrocities were happening. People who tried to bring government and media and public’s attention regarding the war crimes like Mr. Seeman, Mr. P. Maniarasan, Mr. Kolathur Mani were kept in prison on the basis of the Operation Beacon.
            More over, Mr. M. Karunanidhi made a law that anyone who possessed any CD or documents supporting the war crimes will be arrested. Blogs and articles about the ongoing war crime at that time were banned. Medias were asked to keep a tight lid on the whole situation, until now. It makes one wonder how covetous and malicious one would get to protect their political career and their monetary empowerment.
            People from MDMK, Periyar TK and people of many other organisations who tried to stop the vehicles which carried Indian weapons to supply Srilanka were imprisoned for similar reason and kept in Coimbatore jail. In an ideal situation, Mr. Karunanidhi claiming to be eating, sleeping, breathing and dwelling within Tamil should have had the back bone to stand up toward such crimes to the central government. But no, to safe his political life and his family’s future in politics, he danced along and let millions be killed.
            Srilankan ministers who visited Tamilnadu at his reign were given full protection to visit places and temples that reflected tamil culture. But LTTE captain Mr. Prabakaran elderly mom who came to Chennai for medical treatment was deported from Chennai. The irony...
            After the war, tamilians living outside the country tried to join together and collect funds to provide food and basic needs to people were dying from hunger after the war. The name of the ship was ‘’ Vananga Mann’’. This ship was never even allowed to enter into Tamilnadu waters and was sent back to Calcutta. This happened in Mr. Karunanidhi’s time as well.
            It was during his period prison’s were filled with people who were genuinely worried about the usage of chemical bombs and war crimes and tried to peak about it in public.
            But we all know that this political stance, where they fight with congress and then kiss and make up is very easy for DMK. It is not forgotten that 300 Tamil students supporting Tamil language, who took part in riot against congress were killed most cruelly in 1967. It was using these murders; DMK became the ruling party against congress. But by the time the parliament elections were around the corner, DMK shook their hands in union with congress.
            His political career reached its peak, while he sat on his on top of these 300 students dead bodies, who fought for their language. He was the one who built building to honour the then Prime Minister Bakthavatchalam who was responsible for these students’s death in the first place. How many of you even knew about these bloody histories, Leave alone who were killed and where they were buried?
All the political parties are only concerned about reaping their monetary gains and political power, are very clever in weaving their crafty webs, to keep commoners like us deluded that everything is peachy.
            This spark the students of Tamilnadu have created currently to voice out their retaliation against the war crimes committed against Tamils finally have started catching the eyes of these contemptuous politicians, including Mr. Karunanidhi.
            The only thing we have to say to the students of Tamilnadu is DON’T LISTEN TO ANY POLITICIANS OR ANYONE FOR THAT MATTER. JUST REMEMBER THAT THE ONLY FOCUS AND GOAL IS TO BRING THE CRIMINALS TO LIGHT AND BRING JUSTICE.
            Hopefully this movement that has been started by students will lead a path that would finally bring the international attention and get these war crimes reinvestigated without any partiality, Let the Srilankans who have encroached all the Tamil areas be moved out and bring back basic rights and liberty to the Tamil minority has have been done wrong in the past.
            Let these be the focus and soul purpose for bringing Tamil all over the globe together!!!.
            Let us for once forget about the caste, creed and walks of life, we belong to and just hold onto the one common denominator, which is Tamil language and heritage!!!
            Let us join hands with all those who share the same dreams. Let us not waste our precious time on the parasites who seek their own benefits out of this pure effort!!!
            Stand tall and Remember this is going to be a history defining moment and will really be the Beacon of hope for all those innocent lives we have lost and suffered and still suffering!!!
            Let us stand strong till we reach our goals!!!

Tuesday, March 5, 2013

உதிர்ந்தவை!!!



கடைசியாக ஆசையோடு பார்த்த பார்வைகள்
எப்போதென்று எழுந்த கேள்வியை
கவ்வி விழுங்கி போனது
கோபமாய் கடைசியாக பார்த்த பார்வைகள்!

வெறுப்போடு முகம் திருப்பி போன நிமிடங்கள்
சேர்த்து துப்பியது நீ இருக்கும் வரை
நீ மட்டுமே எப்போதும் வேண்டுமென்று
என்று அழுத கண்ணீரை எல்லாம் !!!

பதில் பேசாது, உடல் அசையாது,
இறுகி பாதி மூடிய விழியின் மேல்
அள்ளி போடப்பட்ட மண் வழியே
பார்த்து நின்ற உறைந்த பார்வை
மனதிற்குள் ஏதோ உடைத்து போகிறது!!!

நீல நிறத்தில் சவப்பெட்டி ஒன்றும்
பக்கத்தில் விழுங்க வாய் திறந்து
காத்திருந்த குழியொன்றும்
அதில் அடக்கமாய் படுக்க நீயும்
என்னவாகவோ உன்னோடு பிழன்ற நானும்!!!

முகம் கடைசியாக பார்க்க சொல்லி வேகமாக
பெட்டியை மூடிவிட பார்க்கும் கைகளும் குரல்களும்
உன்னையும் என்னையும் சுற்றி!
இறந்து போன உன்னை எப்படி கட்டி அழவேண்டும்
என சொல்லியபடியே செல்கிறது புடவைகளும் அதன் வாசங்களும்!

கோழி குஞ்சின் வயிற்று சூடு போர்த்தி வந்தவன் நீ!
சில்லிடும் உதடு முதன்முறை உன்னிடம்
முத்தம் கொடுக்க நெருங்கிய போது யோசித்தேன்
எப்போது கடைசியாக கொடுத்தேன் ஆசையை என்று!!

பதறி போகிறது மூளையும் அதனோடு இருக்கும் இதயமும்
நினைவில் இல்லையே கடைசியாக
உன்னை கட்டியணைத்ததும்
உன்னை முத்தமிட்டதும் என்று!!!
கேள்விகள் நிறைய இப்போதும்
வலித்ததா இறக்கையில்?
அழுகி போகிறாயா?
உன்கூட வைத்து புதைத்த குட்டி பொம்மை சுகமா?
கல்யாணத்திற்கு தைத்த கோட்டும் அழகாக இருந்தது புதைக்கையில்!
என்னை பார்த்தாயா ?

உன்னால் இறக்க முடியும் என்று
இன்னும் உறைக்கவில்லை!!!
எனக்கு பசிக்கிறது என்று நீ கேட்கையில்
கொடுக்க உணவு இல்லாது நான் தேடும் கனவுகளும்
அப்பாவை தேடி ஓடும் கனவுகளோடு
கலந்து தொடர்கிறது
இப்போதெல்லாம் இரவுகளில்!!

இறக்கும் ஒவ்வொரு முகத்திலும்
உன் வாசம் பூசி மறைந்துவிட்டாய் நீ!!!
இத்தனை நாள் பார்த்து வளர்த்துவைத்த
கோபமும் நானும்
இனி என்ன செய்வது என்று புரியாது
நிற்கிறோம்
தொடங்கும் முடிவும்
முடியும் தொடக்கமும்
இணைகிறது ஒரு புள்ளியில்!

Friday, February 8, 2013

அவை தின்னப்படுபவை தான்!!!



நான் முதல் இல்லை!
நான் கடைசியும் இல்லை!
நீயும் அதே!
நான் என்பதற்கும் நீ என்பதற்கும்
வலிக்கும், சிலிர்க்கும்..
அவை சிரிப்பவை, அழுபவை..

பெயர் என்ற ஒன்று வாடகைக்கு கொஞ்ச நாள் தங்கிசெல்லும்
நான் என்பது அதுவாக மாறும் வரை!!!
ஒன்றை ஒன்று விழுங்கும்..
மண் விழுங்கும் விதை
அதை விழுங்கும் மரம்
அதை விழுங்கும் பறவை
அதை விழுங்கும் மனிதன்
அதை விழுங்கும் மண்...

நான் என்பது நிற்காமல் ஓடுகிறது
மற்ற நான்களுடன்!!!
கலவியில் கூடுகிறது
சண்டையில் கொல்கிறது
இன்று போன நானை சுற்றி
நாளைக்கு போக இருக்கும் நான்கள் கட்டி அழுகிறது

இருக்கும் வரை நான் என்பது மட்டுமே மையப்புள்ளி
நான் என்பதை சுற்றியே சூரியனும் பூமியும்!!
நேரம் மட்டும் தான் வெவ்வேறாகிறது
ஆனால் எல்லாமே இங்கு தின்னப்படுபவை தான்
ஒன்றும் பாக்கியில்லை..

Monday, February 4, 2013

கடந்து போகிறது!!!


வெளிச்சம்
ஒரு கணத்தில் தாண்டி செல்லும்  தூரம்
மூன்று லட்சம் கிலோமீட்டர் என்று
சொல்லி தந்த பார்னபாஸ் மாஸ்டரின்
மகன் இப்போது அதே வகுப்பில் பாடம் எடுக்கிறாராம்!!!

தாவணியில் ஒரு பொட்டு சேப்பு குச்சிஐஸ் துளி
சிந்தியதில் கோபித்து கொண்டு போன
பள்ளி தோழி எஸ்ஜே
வேலையில்லாமல் திண்டாடி விலைமாதுவாகி
போனவாரம் எய்ட்ஸில் செத்து போய்விட்டாளாம்!!!

பக்கத்துவீட்டை இடித்து புதிதாக கட்டியதில்
ரொம்ப நாளாக இருந்த மாமரம்
வெட்டி விறகாக்கிவிட்டார்களாம்
அதன் மாம்பிஞ்சுகளோடு
ஊறுகாய் போட யாரும் இல்லாது!!!

மகன் ஒருவன் துபாயில் க்ளீனராக
வேலைசெய்துகொண்டு வந்த காசில்
கட்டிய ஆறுமுகம் தாத்தாவின்
மூன்றடுக்கு வீடு முழுக்க
சாம்பிராணி வாசம்!!!

முகம் நசுங்கி வயிறு பிதுங்கி இறந்து போன
நாய்க்குட்டியின் அம்மா
இன்னும் 5 குட்டி இட்டுருக்கிறதாம்!!!

பழைய ரோட்டில் இருந்த வீடுகளை
முற்றத்தோடும் மரங்களோடும்
சேர்த்து விழுங்கிவிட்டதாம்
பளீர் வண்ணத்தில் உயரமான அபார்ட்மெண்ட்கள்!!!

அந்த தெருவில இருக்கும் எல்லா ஜன்னல்களிலும்
தூசு ஆடியபடியே படர்ந்து இருக்கிறது
புழுதி படிய விடாத வாகனங்களின் தாளத்தால்!!!

முறுக்கு சுட்டு கொண்டு வரும் தாத்தா!
கன்னத்தை கிள்ளி முத்தம் தந்துவிட்டு போகும் ஆயா
பிப்பீ ஊதிக்கொண்டு மாட்டை ஓட்டி செல்லும் குடுகுடுப்பை
மீனு வேணுமாம்மா என்று கேட்டு செல்லும் மீன்கார அத்தை
உங்க அப்பாவை இம்மாத்தூண்டா இருக்கும்போதே தெரியும் எனும் ரிக்‌ஷாத்தாத்தாவும் மற்ற ரிக்‌ஷாக்களும்
காணோம்!!!

மொட்டைமாடி தண்ணீர் டேங்கின் மீது
கால்வைத்து ஏறி பார்த்தால்
தெரியும் வயல்கள் தொலைந்து விட்டதாம்!!!

எல்லா வீட்டினுள் இருந்தும் சீரியல் அழுகுரல்
ஏகமாய் ஒளிக்கிறது!!!
என் குட்டி மகனும் மருமகளும் கேட்கிறார்கள்
பம்பரம் என்றால் என்ன என்று!!!
மரங்களை xboxல் வளர்கிறான் இளவரசனான அவன்!!!
கோட்டையில் தனித்து வாழும் இளவரசியாக
வாழ்கிறாள் தன் பொம்மைகளோடு அவள்!!!

Saturday, January 26, 2013

அந்தரத்தில் மிதக்கும் வேரொன்று!!!



வெவ்வேறு சுவையோடு துறுவலாய் மிதந்து
காதினுள் ருசிக்கும் உணர்வுகள்!
கசக்கும் சில!
துவர்க்கும் சில!
வெடிக்கும் காரமாய் பல!
காதுகள் தேடுவதோ
இனிப்பையும் இனிப்பு போன்ற சிலவற்றை மட்டுமே!!!


விதவிதமாய் மாறும் வானங்கள்!
முக்கோணமாகி, வட்டத்திலிருந்து சதுரமாய்
சட்டென்று பல்லாயிரம் வடிவத்தில்
உருவம் மாறும் வானத்தின் மூலைகளிலிருந்து
தூவலாய் ஒடிந்து விழும் கனவுகள்
பறந்து வந்து வித்தாகி முளைக்கிறது மூளைகளுக்குள்!!

நிறமும் மாறிப்போகும் வண்ண வானத்துக்குள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் மாறி மாறி
பறக்கும் பட்டங்களாய் சுவையோடு திரியும் காதல்கள்!
அண்டம் முழுக்க திரியும் மேகங்களுக்குள் ஆணிவேர் நங்கூரமிட்டு
காதுகளும் கண்களும் மூளைகளும் கொண்ட மனிதர்களுக்குள்
நானும் எனக்கான ஒரு குட்டி மேகத்திரளினுள்!!!

தாவி தாவி இனிப்போடு சேர்ந்து
தூவலாய் விழும் கனவுகள் விழுங்குவதில்
உயிர் சிலிர்க்கிறது!
பனி பஞ்சு போல உதிர்ந்து கொண்டிருக்கும் கனவுகள்
சில நேரம் என்றோ கட்டி மறக்கப்பட்ட
வெறுமையான பறவை கூடுகளில்
மொத்தமாய் திரண்டு உறைகிறது!
அதை அள்ளி தின்று மிதக்கிறேன்!

சுற்றி இருக்கும் மேகங்களுக்குள் சிரித்தப்படி
பறக்கும் மனிதர்களுக்கெல்லாம்
ஆணிவேர் நிலைத்து நிற்கிறது!
கருமையான இருட்டொன்றில் என்
ஆணிவேர் அறுந்து பறந்துபோய்விட்டத்தில்
அழுகி போனது என் மேகத்தின் ஒரு பகுதி!
மேகமும் நானும் இன்னமும்
பறக்கயத்தனிக்கிறோம்
புதிது புதிதாய் முளைக்க தொடங்கியிருக்கும்
நார்வேர்தொகுதியோடு!!

Friday, December 14, 2012

தட்டாம்பூச்சி ஆசைகள்!!!



எனக்கே எனக்காய் ஒரு உலகம் தருவதாய்
சொல்லி தினம் குழைந்தப்படி வரத் தொடங்கிவிட்டாய்!

எங்கு பார்க்கினும் வானுயர மரங்களும்
தரை நோக்கி இறங்கும் வேர்களும்
பூச்சி பிடித்து தின்னும் பூக்களும்
இம் என்ற இறைச்சலோடு
அழகாய் பயமுறுத்தும் பரந்து விரிந்த காடொன்றை
தூக்கி சுமந்தப்படி என் முன்னே நிறுத்த
மரமேறியும் ஓடியும்
தேன் சுவைத்தும் முடித்தப்பின்னே
வேறென்ன என்று கேட்கிறேன்..
தோளை குலுக்கிவிட்டு அகண்ட காட்டை மடித்து
குப்பையில் போட்டுவிட்டு செல்கிறாய்!!!

இன்னுமொரு நாள் கடந்து செல்ல,
மீண்டும் நீ!!
நுரை தெறிக்கும் பெருவெளி!!!
சிறு ஊற்றாய் தொடங்கி,
ஒவ்வொரு நீர்த்துளியாய் சேர்ந்து தைத்து
மெல்ல அகண்டு நதியாய் மாறி,
செங்குத்து பள்ளமொன்றில் ஓ என்ற சப்தமுடன்
விழுந்து உடையும் நீர்வீழ்ச்சியாக
மெல்ல சென்று நீலமும் நுரையும் கலந்த கடலாய் மாறி
சிரமப்பட்டு கையிரண்டில் தூக்கி கொண்டு நீ வர,
முங்கி மறைகிறேன், நீந்தி எழுகிறேன்
மீனோடு பேசிவிட்டு கடலாழத்தில் உணவருந்தி
கொஞ்சம் தூங்கியும் விட்டு
உன் கைவிட்டு இறங்கி
`` இவ்வளவு தானா`` என்று கேட்க
கடலை குடித்து விட்டு அசதியாய் செல்கிறாய்.

இப்படியே ஒவ்வொரு நாள்
வானம் பிடித்து தலையணையில் அடைத்து ஒரு நாள்!
நட்சத்திரங்களை வலையில் பிடித்து ஒரு நாள்!
எல்லா வண்ணங்களையும் குவளைக்குள் கொண்டு ஒரு நாள்!
அண்டவெளியின் அத்தனை சூரியனும் கோர்த்தெடுத்து ஒரு நாள்!
பூமியின் எல்லா நிழல்களையும் ஒன்றாய் தைத்த அழகான உடையோடு ஒரு நாள்!

என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டிருக்கக்கூடுமாயின்
ஒரு வேளை கேட்டிருப்பேன்
இரண்டு வயது குழந்தையின் கனவொன்றையோ
அல்லது புதிதாய் பிரியும் நுனிப்புல் ஒன்றையோ
அல்லது மெலிதாய் உதிர்ந்த பூவொன்றையோ!!!


உனக்கும் புரிவதில்லை! எனக்கும் புரிவதில்லை!


என் தேடல் எதை நோக்கியென்று!!



Saturday, November 3, 2012

சிடுக்கான காதல் கடிதம்!!!


          வாழ்க்கையில் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது... அவைகள் அதன் போக்கிலேயெ ரசித்த பின், மனதின் மூலையில் சின்ன x குறியீட்டை போட்டு விட்டு சென்று பதுங்கி கொள்கிறது.. சமீபத்தில் எனக்கு முகம் தெரியாத ஒருவரிடன் இருந்து வர தொடங்கியிருக்கும் ஒரு சிக்கலான ஆனால் மிக அழகான கடிதங்களை இங்கு பகிர்கிறேன்..

செப்டம்பர் 3

ப்ரியா இதை அஞ்சனாவிடம் சேர்த்துவிடவும்

நண்பனுக்காக

முகிலன் டாவின்சி

என்று சொல்லிக்கொண்டு ஒரு இணைப்பை தாங்கி வந்த கடிதம் இது..




அன்புள்ள அஞ்சனா

இது ஒரு காதல் கடிதம்

வெகு நாட்களாக உனக்கு எழுத நினைத்து எழுதாமல் விட்ட கடிதம் இன்று என்னையும் மீறி எழுதி முடிக்கப்படுகிறது. யாருமற்ற தனித்தீவில் வசிப்பது மிக கொடுமை என்பது தனிமையை துணையாய் ஏற்று கொள்ளாதவர்களுக்கு மட்டுமே, நமக்கு அப்படி அல்ல... உன் பாணியில் சொல்லப்போனால் இது சக் நோலாந்துக்கும் வில்சனுக்குமான உறவு போல.

உன்னை முதன்முதலாக பெ செயிண்ட் ஆனில், நீ என்னை கடந்து போன போது பார்த்ததும், ஏனோ மனம் உன்னை பின் தொடர செய்தது. உன் நடையில் இளையராஜாவின் தொடர் இசை தெரிந்தது. ஆம்! நிச்சயம் நீ இளையராஜாவை உன் காதோடு கேட்டுக்கொண்டே நடந்திருக்க வேண்டும்.

மனம் உன்னை பற்றி மட்டுமே நினைக்க தொடங்கியது. உன் நினைவு என்னில் ஆழமாக, உன் ஒவ்வொன்றும் நீங்காமல் பீதோவனும், மொசார்ட்டும் கலந்து தமிழிசை வாசிப்பது போல தெரிந்தது.

அதை நினைத்து கொண்டே ஜெட்டியின் அருகே இருந்த ஆற்றங்கரையில் சிகப்பு வண்ண பீர்பாட்டிலோடு அமர்ந்து கொண்டிருந்த போது, ட்ர்க்வாய்ஸ் நீல கடலையும் அதன் உப்பு காற்றையும் எதிர்நோக்கி வந்த போசிடியன் புதல்வியரில் ஒருத்தி போல கடலையே விழுங்கும் அழகோடு நீ நடந்து வந்ததை பார்த்து, என்னால் உன்னை எதிர்நோக்க முடியாமல், உன் பார்வையில் படாமல் தூரத்தில் இருந்து உன்னையே பார்த்துக்கொண்டிருந்தேன். நீ நான் வீசி எறிந்துவிட்டு சென்ற அந்த பாட்டிலையே பார்த்துக்கொண்டிருந்தாய்.

நீ வீசப்போகும் ரொட்டி துண்டுக்காய் மீன்கள் காத்து கொண்டிருந்தன. தனிமையை விரட்டி விரட்டி காதலிக்கும் உன்னை எனக்கும் மிக பிடித்து போனது. அன்று முதல் உன்னை மட்டுமே பின் தொடர துவங்கினேன். உன் வீடு வரை நான் வராத நாட்களே கிடையாது.

ஒவ்வொரு தருணமும் உன்னை பார்ப்பதற்கு திறந்து இருந்த உன் ஜன்னலை பார்த்தப்படி, உன் குரலை கேட்டப்படி கடக்கும் போதெல்லாம், `` நீ உன் அம்மாவிடம் போர் அடிக்கிறது `` என்று சொல்வது கேட்டு, என்னை உன்னருகில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க தூண்டும். ஆனால் என்னால் அதை செய்ய முடிந்ததே கிடையாது. நீ எழுத துவங்கியதும் நான் அங்கிருந்து சிறு புன்னகையும் சிறு சலன மகிழ்ச்சியுமாய் சென்றுவிடுவேன்.

இந்த கடிதத்தை உன்னிடம் சேர்த்து விடவேண்டும் என்று என்னை படைத்து கொண்டிருக்கும் டாவின்சியிடம் தினம் நூறு முறை கேட்டுவிடுவேன். அவர் அதை மருத்துவர் ப்ரியாவிற்கு அனுப்பிவிடுவதாகவும் அல்லது அதை ஒரு சிகப்பு நிற பீர்பாட்டிலின் முனையில் சொருகி நீ தவறாமல் நடக்கும் அந்த சேய்ஷல்ஸ் கடற்கரையில் உன் கைகளுக்கு கிடைக்குமாறு விசிவிடுவதாகவும் சொன்னார். நீ இந்த கடிதத்தை படிக்கிறாய் என்றால் இது உனக்காக எழுதப்பட்ட என் முதல் காதல் கடிதம் என்பதை சொல்லிவிடுகிறேன். இன்னும் 20 கடிதங்கள் மீதமிருக்கிறது. நீ நடந்து செல்லும் பாதை எங்கும் வீசப்பட்டிருக்கும் காகிதங்களில் ஒன்று, உனக்காக நான் எழுதிய கடிதமாக இருக்கலாம்.

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் கூட என் கடிதம் பறந்து விடலாம். மென்மையான் என் வரிகளுக்கு காகிதத்திலிருந்து சரிந்து விட தெரியாது. அவை கசங்கிவிடும் முன் எடுத்துவிடு!!!

அன்புடன் உன் காதலன்

இன்னொரு புத்தகத்திலிருந்து..

பின்குறிப்பு:

இது என்ன எதை பற்றி என்றே புரியாதவர்களுக்கு.. புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியிருப்பின், இதை படிக்கலாம்..

அற்றவைகளால் நிரம்பியவள் பகுதி 1



Sunday, October 28, 2012

And the piling queries ..



A very well thought set of questions by asomeone on the blog article I wrote about @rajanleaks vs @chinmayi http://www.vettipullai.blogspot.co.uk/2012/10/acrid-revenge-letter-to-chinmayi.html

I have no say in what was spoken between the two groups and what the real issue is...But what bothers me most in this case is 

1. Why has Cyber Crime been so involved in this when there have been multiple cases filed and thrown away to the dustbin?

2. Why was the arrest done so well planned to be before public holidays? This isn't a terrorist activity to be kept for so many days to investigate.

3. If one side wanted to ensure that a case is filed and they expect justice from court, why is one side of equation keep on getting their stance clarified through media while the others have been refrained from doing so?

4. Why has the media not been able to expose what is the real complaint and what are the evidences presented?

5. Who is giving these statements of sexual torture to the media while the accusing party is claiming they did not?

6. Why has a bail not been given in this case even after two days of court functioning? who is preventing this?

7. If an elderly lady has been considered to have been offended with derogatory sly remarks , can we substitute "bloody !#@$!#%!#%" said by one side and substitute with "bas****" and consider they have used derogatory terms against the other side?

8. Have the jailed party families have a complaint copy yet? Have they been informed or did they find from media? Why is the media ignoring this so blatantly?

9. What happened to the case filed by a new group against the accusing party?

Even if they have committed wrong (need to wait to see what the courts say), treating the way these ordinary people who have no power, money or influence been treated, stands tall to the fact that there are really only two classes of people - Oppressed and Oppressors.

And to add on from my point of view,

From what I heard from the friends, 

1. Prior to all these issues spiralling out of control, several mediators from twitter have gotten in touch with chinmayi and her mother to apologize for the sly remarks which were inappropriately made from their side. In spite of various attempts, they didn't accept the apologies made both in person and on paper by both @rajanleaks and @sharankay in the commissioner's office and still were summoned and been put behind bars for the past 6 days now.

2. All the newspapers were contacted prior these events and a personal plea was made by a group representing twitter and all the twitter handles, chinmayi had complained about, so that their photographs would be refrained from publishing. In spite of repeated requests, their photographs have been promulgated. 

My question is that, there are perverts who molests children, rapists and murderers who goes unnoticed from the public eyes and all of them just become one amongst the very many faceless and nameless criminals in the society and all that reaches the public is a small column hidden behind the bold advertisements. SO WHY WERE THESE MEN TARGETED SPECIFICALLY? 

3. If derogatory comments were made and If it is justice everyone needs, why haven't the police and men of justice acted upon @meenakandasamy petition, while she was openly threatened that she will be gang raped and had endured much more denigrating comments?

4. If these men lose their jobs for an issue like this and are razed down, can chinmayi be sued on court based on human rights act for all the humility and stress these people and their family have undergone?

Chinmayi still keeps portraying herself as the victim here and acting all innocent while in actual fact she is proving to be more and more mendacious.. 




Friday, October 26, 2012

Acrid Revenge - A letter to chinmayi!!!



Dearest Chinmayi,

            Let me introduce myself first... I am a Doctor working in UK currently, mother of a 10 year old boy, daughter of a widowed mom and belong to scheduled caste. Life has never been fair but I am handling it the best I can, in raising my kid. I have been a fan of your talents for ages. I think I followed you since you participated in the talent show in Sun TV. I have the utmost respect for you and your mom & I have enjoyed all your songs, your performances, your blog, articles about you as an young entrepreneur, and of course the infamous twitter....

            I am one among the many, who came to twitter to meet people with like mind & sharp tongue & to hear the thought that reverberates from civilians with great creative minds belonging to different walks of life. I was thrilled and got sucked into it. It opened up multiple windows into people’s world. I have met great people, not so great people in this journey and I have made really good friends. We do have our difference of opinions but Twitter felt like college. You fight, you make up, you are pulled down, you laugh, you are surprised and you are ragged so on and so forth.

            In the past one year, your conversations have stirred so much of conflict, which rather reflects your basic understanding of life and your opinion about the political problems that we face. End of the day, everyone is entitled to make and have their own opinions. As far as one’s opinion and expression is not vindictive and abrasive, one can get away with everything...

            And now your name is all over the media for the past couple of weeks which has plastered & portrayed that Chinmayi is a poor victim of sexual harassment from these social sites and she is been showered with verbal abuse, derogatory comments and that your life has been endangered. For people who are not acquainted to the social media like twitter and face book, they would be just flabbergasted with these news. Since there are a few who have followed all the conversations that has flown back and forth between you and the rest of the others, you cannot really stand up and say that you are just a victim here!!! So, Please sell your story elsewhere!!!

            Are you really just a victim??? Where have your tweets disappeared? All the way through, you have said inappropriate retorts against the fisherman, people belonging to my caste but you have weaselled out big style and just deleted your tweets!!! But girl, if you are so filled with righteousness, why this conniving scheme??? You have retorted for every single tweet that came your way!! I was kinda proud of you, as you at least had the guts to stand up to what you thought was right!! But I don’t know why you had to go and delete every single one of your tweets that caused such angst and belligerence amongst people. Is it because people would get the real true picture of what actually happened, if you had had left your tweets??

            Being a woman, we are under constant scrutiny all through our life. And being in a massive field like movie industry, which is constantly under public surveillance, does put people like you under constant pressure. I totally get that and I appreciate your effort. I know that you are not answerable to me, but to a society which you are feeding false information to. NOT everything you have told them is true now, is it??

            I have known the twitter handles you have quoted to the police for the past 3 years now. Neither me nor the other so many woman who are on twitter, have had any trouble with the guys you have quoted. There have been plenty of arguments, which are meant arise when there is difference of opinions. But nothing crass, nothing boorish from anyone of these men. And top of that, you probably have the most people in the ignore list in twitter anyways and probably more ignored compared to your followers.

            I have personally known @rajanleaks for the past 2 years and he is a really sharp witted humble person, a responsible adult, a loving husband & very devoted father of baby girl, who has risen to this position through sheer hard work and no family to support him. He has fought all through his life and all he had to share to this world was his quirky sense of humour. I can vouch for him and so can many other friends (which include woman, FYI)!!! I have similar stance on all the twitter handles like @senthlchn @vivaji and many others you have shared as well. All these people are simple civilians!!!

The only reason your paths collided was your insensitive tweets regarding Tamilnadu fishermen who were killed right left and central for no fault of theirs and similar such retorts about other issues related to caste etc. Probably your tweet meant that way, because you didn’t quite understand the gravity of the situation. I don’t blame you, because this is beyond you and not every civilian is been informed about this injustice. For some reason, our so called sincere ingenuous media have never really brought forward these sensitive issues to eyes of our society and they just make sure that all their heads are filled with junk news and incorrigible soaps.

             Now, You and everyone in twitter know that this conflict happened a year ago. You have a better social stance and financial stature than all these people put together. If this issue has really put you through so much of misery, Why act now?? Why didn’t you bring this forward when it was all fresh and hot? What is the ulterior motive behind this?? You have used angry, hostile remarks against all these people; there has been threatening phone calls from your side to these people. Yet you are the victim here.... It doesn’t tally at all. You said something and they said something and you said something back and it went on and ended by itself... Why stir the commotion now???

            I am not trying to take sides here. You were made fun of, I agree. They created a tag to rag you. But girl, these are the very same people, who sang #oppari for one other. They are the first to make fun of one other. That is the whole nature & essence of the twitter. If you think that you were beyond this, you just ignore them as you already did and get on with your life. But suddenly posing you as the sole sufferer after over a year and putting all these people’s very livelihood in jeopardy, sounds very vindictive and cheap, below the belt act for anyone.

            So let’s rewind!!! You have had stress from such remarks by these guys, so you decided to wipe out their reputations and jobs and social stance... Your stress = their lives. Don’t you think you have blown it out of proportion? Oh is it because, you can!!! Is that why? You have the back up to support you and whatever you say become the truth. SO this makes me think that this whole complaint has been well planned and presented to take these men down.

 If it is really about seeking justice, if that is the case, what about all the insensitive crude remarks you have made about these issues and the people who rambled to you because they cared about the very same. So this just brings us back to the era, where you can say whatever you want and get away with it but just want to keep the other side repressed. How is this justice, in any standard???

            If I were in your position, I would have tried better to understand in depth, what I am giving my comments and opinions about before making my point. Better yet, not comment about things that are out of one’s depth, prior to stirring events like this. I hope you have the soul satisfaction of destroying few people who dared to ask you back about the right questions. Remember, Their slangs and the way they formulated the questions & remarks would have been offish for your standard, but the questions were truthful. Hope you can look back into what you said and reflect upon yourself. Oh wait a minute!!! You cannot reflect upon what you have said coz you haven’t left your so called tweets on there!!! You clever girl!!!

             Anyhow, Hope you can sleep finally now that you have brought justice to the world because all the crude buggers are beyond the bars, lost their jobs, reputations and their families will ever suffer for their bread & butter and not to mention been tainted forever for a silly thing like standing up to what they really believed in something true and respectful. You can go ahead with your perfect life and your double standards... Wishing you all the very best!!!


Thursday, July 19, 2012

பேராசையில் அழுகும் அன்பு!!!


நான் இல்லாத நீயும்
அவள் இல்லாத நீயும்
மையத்தின் எதிர் மூலையில்!!!
அடித்து செல்லும் வாழ்க்கையின் ஊழியிலும்
நீங்கள் என்பது இணைந்தும்
நான் என்பது தனித்துமே நகர்கிறது!!!

பிடித்தம் இல்லை
புரிதல் இல்லை
இணைதல் இல்லை
பேச்சு இல்லை
சுகிக்கவில்லை
என்று அடுக்கியபடியே
பரிதாபமாக வலம் வருகிறது
கூர்நகங்களை கொண்ட
பூனையை போல உன் ஆண்மை!

உன் தேவைகள் அத்தனையும்
தடவி கொடுப்பினும்
நான் இல்லாத நீயை
ஒத்துக்கொள்ளும் நீ
அவள் இல்லாத நீயை
தவிர்க்க இயலாது
உதடு பிதுக்குகிறாய்!!!

முதுகின் எலும்பை ஒவ்வொன்றாக கழட்டி
தருகிறேன் ஒவ்வொரு முறையும்
உன் கனிவான பார்வைக்கும்
அன்பான சிரிப்புக்கும்!!
நல்லவன் என்பதில்
சிறிதளவும் சந்தேகமில்லை!
பிரியத்தின் பேராசையில் அழுகும் உன் அன்பு!!

மீண்டும் ஒரு முறை பிரித்து துடைக்கிறேன்
என் சிறகுகளை!!!
எனக்கான வானம்
எனக்கான மேகம்
எனக்கான சிகப்பு பூமரமொன்றில்
சின்னஞ்சிறு கூடு!
பூனைகள் இல்லாத வனமொன்றை நோக்கி
இருக்கும் என் இனிவரும் பயணம்!!!


Saturday, May 26, 2012

கீச்சுகளின் குசுகுசுப்பு 3 - நானும் என் மகனும்


நேற்றைக்கு சண்டை போட்டுபேசவேமாட்டேன் என்று சொல்லிவிட்டு,இன்றைக்கு கொஞ்சிக்கொள்ளும் நட்புகளை வைத்திருக்கிறான் என் மகன்.


 கொஞ்சம் குரல் உயர்த்தி திட்டினால்,பயந்து அலறி என்னையே ஓடிவந்து கட்டிபிடிக்கும் என் பிள்ளையை என்ன செய்யலாம்! இறுக அணைத்து முத்தமிடுவதை தவிர


பறக்கும் மந்திரகம்பளமும், கழுகு தலையும் சிறகும் வைத்த குதிரையும் உறங்குகிறது, என் மகனின் சிறிய படுக்கையில் சுருண்டு




வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டும் என்று தெரிந்த என் மகன் பாக்கியவான்




உன்னை வளர்க்கப்படும் பிரயத்தனங்களில் நானும் ஒரு தாயாக வளர்கிறேன்




என் மகன் தூக்கத்தில் வரும் பூதங்களை, நான் விழித்திருந்து விரட்ட, என் கனவுகள் எனக்காக காத்துகிடக்கின்றது...




என் மகன் உறக்கத்தில் சிரிக்கையில் கடவுளிடம் அவன் கனவை எட்டி பார்க்க ஒரு ஜன்னல் கேட்கிறேன்...



Thursday, November 3, 2011

கீச்சுக்களின் குசுகுசுப்பு 2

எப்போதும் கண்ணுக்குள் எனக்காக காத்திருக்கும் தூக்கம் எங்கு தவறிவிழுந்ததோ தெரியாது தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும்...


இருக்கும் கணங்களில் இருந்து தாவி முடிந்த தருணங்களின் மேலேயே மேய்கிறது மனது..

இசையில் புத்தகங்களில் இருக்கும் வகைமை வாழ்விலும் மனிதர்களிலும் இருக்கும் போல.இத்தனை பயணப்பட்டும் மனிதர்கள் இன்னும் புதிராகவே தெரிகிறார்கள்

சிரிப்பும் நிறமும் சேர்ந்து குழையும் கனவுகளில் மத்தியில், மிருதுவான குளிரோடு ஒற்றை பனித்துளியாய் இறங்கி நெகிழவைக்கிறாய் தோழா..